dimanche 5 août 2007

என்னை பற்றி சில வார்த்தைகள்

இன்று எனக்கு மிகவும் மறக்க முடியாத நாள். எனது தமிழ் வார்த்தைகளை நான் பயன் படுத்தும்போது, மனம் மிகவும் மகிழ்கிறேன். நானும் விரைவில் உங்களுடன் தமிழ் வலை பின்னல் வழியாக இணைவேன் என்று நம்புகிறேன். 'வாழும் வரை போராடு, அதுக்கு நீ தினமும் நீராடு' என்று கூறி உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நாடு!

நண்பர்கள் தினத்தில் புதியதொரு அனுபவம்

இன்று இனிய அனுபவம் எனக்கு கிடைத்தது. தமிழ் ஆர்வம் என்னிடம் இருந்தாலும் அதை என்னால் பயன் படுத்த முடியவில்லை என்ற ஆதங்கம் என்னிடம் இருந்தது. தமிழ் நாட்டில் தமிழ் பயன் படுத்துவதை என்னால் பெருமையாக சொல்ல முடியாது. அது என்னோட கடமை மட்டும் அல்ல. அது என்னோட இருக்க வேண்டிய ஓன்று. ஆனால், இன்றோ என் மனம் மிகவும் மகிழ்வாக இருக்கிறது. என்னுடைய பதிவுகளில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும். விரைவில் நானும் உன்களை போல் நானும் விரைவில் தமிழில் பதிவு செய்ய பழகிக் கொள்கிறேன்.

முதல் பதிவு

என்னுடைய முதல் பதிவு வணக்கம் தமிழ் வாழ்க